Friday, April 1, 2011

சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

அனுமதியின்றி வைத்த பேனரை அகற்றிய அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக, நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் உட்பட நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

சிவகங்கையில் இந்திய கம்யூ., வேட்பாளரை ஆதரித்து நேற்று, அவர் பேசினார். மேடையில் இருந்த பேனருக்கு, அனுமதி பெறாததால், அதை அகற்ற டி.எஸ்.பி., இளங்கோ உத்தரவிட்டார். பேனர், கட்சி கொடிகளை போலீசார் முன்னிலையில் அலுவலர்கள் அகற்றினர்.

இதற்கு சீமான், மாவட்ட அமைப்பாளர் தீனதயாளன், நிர்வாகிகள் அன்வர்ராஜா, சோமசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தனர்வி.ஏ.ஓ., கோபிநாத் புகாரின்படி, 143 (கூட்டம் கூடியது); 188 (அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல்); 353 (அரசு பணியை தடுத்தல்); 506(1)(கொலை மிரட்டல்) பிரிவுகளின் கீழ், இன்ஸ்பெக்டர் சங்கர், எஸ்.ஐ., வடிவேல்முருகன் வழக்கு பதிந்தனர்.

No comments:

Post a Comment

ebook