தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் மயிலை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.விஜயசேகர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு, அப்பாவி வாக்காளர்களை கண்டறிந்து ஓட்டுக்கு தலா ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விநியோகம் செய்துள்ளதாக அந்த தொகுதி மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
ராகுல்காந்தி கொள்கைக்கு மாறாகவும், நேர்மையான வழிகாட்டுதலுக்கு எதிராகவும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள தங்கபாலுவை வன்மையாக கண்டிக்கிறேன். மைலாப்பூர் தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடைபெற தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment